More than a Blog Aggregator

Tuesday, 17 May 2011

ரஜினி அவசர சிகிற்சை பிரிவில் அணுமதி : அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டம்

ரஜினியின் உடல் நிலை சற்றுமுன் மீண்டும் மோசம் அடைந்துள்ளது. இவறதற்போது போரூர் ராமச்சந்திரா அவசர சிகிற்சை பிரிவில் அணுமதிக்கப்பட்டு தீவிர சிகிற்சை அளிக்கப்படுகிறது  இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவரை பார்ப்பதற்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை முற்றுகையிட்டனர். அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டனர்.


ரஜினிக்கு ரத்தப் பரிசோதனையில் சிறுநீரக கோளாறு மற்றும் இரைப்பை தொடர்பான சில பிரச்சினைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு இரைப்பை கிருமிகளை நீக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டது.   புகைப்பழக்கத்தால் அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இரைப்பை தொடர்பான கோளாறுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். சிறுநீரக பிரச்சினைக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ரஜினிக்கு நிமோனியா காய்ச்சலும், சளியும் உள்ளது. அதற்கு தொடர்ந்து மருந்துகள் அளித்து வருகிறார்கள். புகைப்பழக்கம் காரணமாக அவரது நுரையீரலில் அழற்சி ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவருக்கு லேசான மூச்சுத்திணறல் உள்ளது.


இந்நிலையில்,  ராமச்சந்திரா மருத்துவ மனையை சேர்ந்த டாக்டர் ஒருவர்,


‘’ ரஜினிக்கு இதயத்தில் சிறு பிரச்சினை உள்ளது. இதை தீர்க்க “பேஸ்மேக்கர்” கருவி பொருத்துவது அவசியம்’’ என்றார். ரஜினியின் உறவினர் ஒருவர், ரஜினிக்கு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தால் அவரைப் பார்க்க ஏராளமானோர் வருகிறார்கள். இதை தவிர்ப்பதற்காக அவரை அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

No comments:

Post a Comment